தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் .இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
எனினும் அந்த வகையில் டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இவ்வாறு இருக்கையில் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாக இருப்பதால் ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலத்துளித்து வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனிடம் “நாம எப்போ ஷூட்டிங் போலாம்” என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் “ஷூட்டிங் எப்போ வேண்டுமானாலும் போலாம் சார், அதற்கு முன் எப்போ கதை சொல்விங்க” என கேட்டுள்ளார்.
Kadhaiya https://t.co/8petz7Spyf pic.twitter.com/ayfSRozooi
எனினும் அதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு “கதையா” என வடிவேலு GIF உடன் ட்விட் செய்து இருக்கிறார். இதனால் தற்போது ரசிகர்கள் இன்னும் கதை கூட கூறவில்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!