தமிழ் சினிமாவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு.பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது மனதில் பட்டதை பேசும் தைரியமானவராக வலம் வருகின்றார். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.
இவர் நடிக்கும் படங்கள் தற்போது நல்ல வசூல் பெற்று வருகின்றது.இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல விமர்சத்தையே பெற்றது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று வல்லவன். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் லூசு பெண்ணே.
யுவன் ஷங்கர் இசையமைத்திருந்த இப்பாடலை சிம்புவே எழுதி, பாடியிருந்தார். அத்தோடு அன்று முதல் இன்று வரை சிம்பு என்றால் கண்டிப்பாக அனைவருக்கும் இந்த லூசு பெண்ணே பாடல் நினைவுக்கு வரும்.
இவ்வாறுஇருக்கையில், இந்த பாடலை நடிகை திரிஷாவை நினைவில் வைத்து தான் நடிகர் சிம்பு எழுதினாராம்.
விளையாட்டாக இப்படி கூறிவிட்டு அதன்பின் சும்மா தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ளார் சிம்பு. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
He he appo #Trisha thaan andha #LoosuPenne pola 😁😍
Nostalgic #SilambarasanTR 🤩👌pic.twitter.com/ZCft21YVdX
Listen News!