கடந்த சில வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும், நாயகன் - நாயகி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில் ராஜா ராணி 1-சீரியல் ஆல்யா மானசா -சஞ்சய். சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா - தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்
இவர்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் பின்னர் சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகின்றார். அதே போல ஸ்ரேயா ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரஜினி' என்கிற தொடரில் நடித்து வருகிறார் .
இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்களின் ஷாப்பிங் வீடியோ, டூர் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஜோடி தற்போது, மாலைத்தீவுக்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் ரொமான்ஸில் மல்லுக்கட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!