நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து பூரித்துள்ளார் அவரது மகள் ஐஸ்வர்யா.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தையும் பார்த்து ரசித்து பாராட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அதில் சோஃபாவில் அமர்ந்து செல்போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அத்தோடு அந்த புகைப்படத்துக்கு ஃபில்டரே தேவையில்லை. பொய் எதுவும் இல்லை, குறை இல்லாதது..
ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். தந்தை அன்பு.. நேர்மறையான விலைமதிப்பற்ற பர்ஃபெக்ட் படம்.. உங்கள் எல்லா நாட்களும் மேற் கூறியுள்ளதுபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய #விஜயதசமி வாழ்த்துக்கள்.iphone14promax இல் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்
ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ரஜினியின் ஸ்டைலை புகழ்ந்து வருகின்றனர். கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் ஒன்று அமைதியாக அமர்ந்திருக்கிறது என்று தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் iphone 14 pro maxக்கு ப்ரமோஷனா என்றும் கேட்டு வருகின்றனர்.
#nofilter needed,nothing false,flawless
A frame that can never go wrong..
A face that can never have a wrong angle. #fatherlove❤️
Positive priceless picture perfect
Hope all your days are as the above line states
Wishing everyone a happy #vijayadhasami
Shot on #iphone14promax pic.twitter.com/e6est0MDH4
Listen News!