• May 06 2024

சூர்யாவால் ஸ்ருதிஹாசனை பிரேக் அப் செய்த சித்தார்த்- இதுவரை யாரும் அறிந்திடாத புதுக்கதை - இப்படியொரு விஷயம் நடந்ததா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மொழி படங்களிலும் நடித்து வருபவர் சித்தார்த்.பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்து, அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

 தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்த போது, உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.


பின்னர் ஸ்ருதிஹாசன் தமிழில், ஹீரோயினாக 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, சூர்யாவுடன் காட்டிய நெருக்கம் தான் சித்தார்த் - ஸ்ருதிஹாசன் பிரிவுக்கு காரணம் என புது புரளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, ஸ்ருதிஹாசன் - சூர்யாவுடன் அவுட்டிங் சென்றதாகவும், அது பிடிக்காத சித்தார்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


 எனவே தனக்கு இனி சித்தார்த்துடன் செட்டாகாது என்ற மைண்ட் செட்டுக்கு வந்த ஸ்ருதிஹாசன், சித்தார்த்துடன் பிரேக் அப் செய்தார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருமே தங்களுடைய திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி அடுத்தடுத்த காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே சித்தார்த் கடந்த 2002-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை செய்த மேக்னா என்கிற பின்னணி பாடகி ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், அவரிடம் இருந்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement