• Apr 30 2024

உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனம் காட்டியது கேடுகெட்ட செயல் ! நடிகர் சிவகார்த்திகேயனை வெளுத்துவாங்கும் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி.

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கின்றது.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், என் படத்தில் தான் சிவகார்த்திகேயன் பாடகராக அறிமுகமானார். ஆனால் இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். 


அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். தற்போது இமானின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியதாவது, காலம் முழுக்க சிவகார்த்திகேயன்  இமானுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறார். ஆனால் அந்த நன்றியை மறந்து சிவகார்த்திகேயன் இமானுக்கு மிக பெரிய துரோகம் ஒன்று செய்தார். சில மாதங்களுக்கு முன்பே கூறி இருந்தார்.  தற்போது இந்த விடயம் வெளி வந்திருக்கி்ன்றது.

இந்நிலையில் தற்போது பிஸ்மி தனது x தள பக்கத்தில், "உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறு எதுவுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/jbismi_offl/status/1714145107237306447?t=qbhjlt5as3R5g9oK3cYSpw&s=19

Advertisement

Advertisement

Advertisement