• May 08 2024

சந்தியாவை கொலை செய்ய ஜெயிலில் இருந்து தப்பித்த செல்வம்.. இன்றைய முழு எபிசோட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு ஏத்தாற் போல விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…..

விக்கி செல்வத்தை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து சந்தியா மற்றும் பார்வதியை கொலை செய்யச் சொல்லி அனுப்பி வைக்கிறார். மேலும் செல்வமும் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்து சந்தியா வீட்டு முன்னாடி நின்று இனி உன்னை சந்தோஷமாக வாழ விடமாட்டேன் என கூறுகிறார்.

இவ்வாறு இருக்கையில் மறுநாள் காலையில் சந்தியாவை பேட்டி எடுக்க டிவி பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த மீடியாவும் வீட்டின் வெளியே நிற்க சந்தியா பேட்டியளிக்கிறார். உங்களுடைய அடுத்த டார்கெட் போலீசாவது தானா என கேள்வி கேட்க சிவகாமி அனைவரையும் திட்டி அனுப்பி விடுகிறார்.

அதன்பின்னர் சந்தியாவை அழைத்து இந்த போலீசார் நடத்துற நிகழ்ச்சிக்கு நீ போகக்கூடாது. அது எனக்கு நல்லதா படல என கூறுகிறார். ஆனால் இதை சரவணனிடம் என்னால் நேரடியாக சொல்ல முடியாது அவன் என்னை தவறாக நினைத்து விடுவான். ஆகையால் நீயே அவளிடம் சொல்வது போல சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் தடுத்து நிறுத்தி விடு என தெரிவிக்கிறார்.

மேலும் இந்த குடும்பத்துக்கு எது நல்லதுனு படுதோ அதை செய் யோசிச்சு பாரு என கூறி சந்தியாவை மென்டல் டார்ச்சர் செய்கிறார். இதனால் சந்தியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement