• Dec 09 2025

மயிலின் உண்மையை வெளிச்சம் போட்ட சரவணன்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்பொழுது அந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.


அதில், பாண்டியன் சரவணனைப் பார்த்து உங்க ரூமில ஆரம்பிச்ச சண்டை இண்டைக்கு முச்சந்தி வரைக்கும் வந்திருக்கு... என்று கோபமாக சொல்லுறார். அதைக் கேட்ட சரவணன் என்ன பிரச்சனை என்று சொன்னேன் என்றால் நீங்க யாருமே தாங்கமாட்டீங்க என்கிறார்.

பின் சரவணன் மயிலுக்கு அடிக்க கை ஓங்குறார். அதைப் பார்த்த பாண்டியன் தடுத்து நிறுத்துறார். பின் சரவணன் பாண்டியன் கிட்ட இவள் உலகமகா ஏமாத்துக்காரி என்கிறார். மேலும் இவள் MPA ஒன்னும் படிக்கல... சொன்னது முழுக்க பொய் என்கிறார்.


அதைக் கேட்ட கோமதி மயக்கம் போடுறார். அதைப் பார்த்த சரவணன் இதுக்கே மயங்கினா எப்படி... இவள் என்னை விட 2 வயசு பெரியவள். ஆனால், நம்ம எல்லாரையும் இவள் ஏமாத்திக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுறார் சரவணன். 

Advertisement

Advertisement