• Mar 26 2026

நள்ளிரவு 2 மணிக்கு எடுத்த முடிவால் முதல் வரிசையில் சரத்குமாருக்கு இடம்..! அணிதிரண்ட மக்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள், அவர் பேசிய வசனங்கள் இன்றும் பிரபலமாக காணப்படுகிறது.

தற்போது சினிமா துறையிலிருந்து சற்று விலகிய சரத்குமார் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான போர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.


மறுபக்கம், 17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்த சர்க்குமார், திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.


இவ்வாறு மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பேசுப் பொருளாக உள்ளது.


இந்த நிலையில், கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. 

Advertisement

Advertisement