• Apr 26 2024

சரவணனை மீட்க போராடும் சந்தியா- கடும் கோபத்தில் இருக்கும் சிவகாமி- நடக்கப் போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜோதி பற்றி கேட்க போலீஸ் அதிகாரிகள் செல்வத்தின் ஆட்கள் ஜோதியை கடத்தி விட்டதாகவும் கூடவே சரவணனையும் கடத்திவிட்டதாக சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார். கண்கலங்கி அழுகிறார். பிறகு போலீஸ் அதிகாரிகள் ஆறுதல் சொல்ல எனக்கு நம்ம டிபார்ட்மெண்ட் மேல நம்பிக்கை இருக்கு என கூறுகிறார்.

அடுத்ததாக இந்த தகவலை செய்தியில் பார்த்த சிவகாமி மயங்கி விழுகிறார். சந்தியா மீது ரொம்பவும் கோபப்படுகிறார். இந்த பக்கம் பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து விட சரவணன் கடத்தியது உண்மைதான் என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். பிறகு சந்தியா பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது அவர்களிடமிருந்து உங்களுடைய கணவரை  மீட்க அரசாங்கத்திடம் டிமாண்ட் வைப்பீங்களா என்ன கேட்க நான் ஒருபோதும் அதை எதிர்பார்க்க மாட்டேன் என சொல்ல அதை பார்த்து கோபம் அடைந்து டிவியை உடைத்து விடுகிறார் சிவகாமி. சந்தியா மீது மேலும் கோபப்படுகிறார்.


பிறகு சந்தியா அதற்காக என்னுடைய கணவரை மீட்டெடுக்காமல் இருக்க மாட்டேன் அதற்கான வேலைகள் அனைத்தையும் செய்வேன் என கூறுகிறார். பிறகு போலீஸ் அதிகாரிகள் சரவணன் கௌரி மேடம் பற்றி மட்டும் யோசிக்க முடியாது. போர்ஸ் வர வைக்கலாம் என சொல்ல அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கின்றனர். சந்தியா இந்த டீமில் தானும் கலந்து கொள்வதாக சொல்ல போலீஸ் அதிகாரிகள் அதுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.


நீங்க இந்த விஷயத்தில் தலையிட்டால் உங்களுடைய கிரேட் மார்க் குறைக்கப்படும் என எச்சரிக்கின்றனர். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.



Advertisement

Advertisement

Advertisement