தென்னிந்திய சினிமாவில் இருந்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா ரூத் பிரபு இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணம் செய்து வரும் அவர், பல வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் காதல் கதாபாத்திரங்களில் கவனம் பெற்ற அவர், பின்னர் வித்தியாசமான கதைகளையும் சவாலான வேடங்களையும் தேர்வு செய்து தனது திறமையை நிரூபித்தார்.

சினிமா வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டிருந்தாலும், அவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளித்து தொடர்ந்து முன்னேறி வருகிறார் சமந்தா. அவரது உறுதியும், முயற்சியும் ரசிகர்களுக்கு ஊக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்துகொண்டது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக அமைந்தது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தனது எண்ணங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!