தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்து ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகினார். இந்த தொடரில் பெண் போராளியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதுதவிர புஷ்பா படத்தில் ஊ சொல்லுறியா மாமா என்னும் பாடலுக்கு நடனமாடி வேற லெவலில் பேமஸ் ஆன இவர் தற்பொழுது குஷி ,சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் ஹிந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
இந்திய அளவில் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து வருகிறார்.இந்நிலையில் சமந்தா தற்போது தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி இருக்கிறார்.
அவர் இதுவரை 2.5 கோடி ருபாய் அளவுக்கு சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது 1 கோடி அதிகரித்து 3.5 கோடி கொடுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கூறி வருகிறாராம்.
Listen News!