இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவானதோடு இதன் முதல் பாகம் கடந்த 30ம் திகதி வெளியாகியிருந்தது.
சோழ மன்னர்களின் ஆட்சி கொடைத்திறன் போர் வீரம் என்பவற்றை இந்த திரைப்படம் எடுத்துக் காட்டியுள்ளதோடு வெளியாகிய 5 நாட்களில் 270 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்த இப்படமானது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருந்தது.இப்படத்தைப் பார்த்த பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "#PS1 கவருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். மணிரத்னம் படம் உருவாக்கத்தில் தான் ஒரு அரசன் என்று மீண்டும் நிருபித்து விட்டார்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் சித்திரமான சித்தரிப்பு. ரஹ்மானின் மியூசிக்-ரிவெட்டிங்! முழு 3 மணி நேரமும் தொடர்ச்சிக்கான சூழ்ச்சிகள். இந்த காவியத்தை உருவாக்கிய பரந்த இராணுவத்திற்கு (படக்குழு) வாழ்த்துக்கள்!" என ஷங்கர் டுவீட் செய்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.
மேலும் இப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!