• Apr 30 2024

இவர்களால் தான் நான் எப்போதும் புடவை அணிகிறேன் – முதன் முதலில் உண்மையை கூறிய சாய் பல்லவி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’.

மேலும் இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ரசிகர்களும் வரவேற்றார்கள்.

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி நிஜத்தில் ஒரு மருத்துவம் பயின்ற மாணவி என்பது பலருக்கும் தெரியும். அதே போல சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே சாய் பல்லவி குடும்பபாங்கான ரோலில் தான் நடித்து வருகிறார்.

மேலும் அதே போல பல பொது நிகழ்ச்சிகளில் புடவை அணிந்தே செல்கிறார். இதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தனக்கு 18 வயது இருக்கும் போது கல்லூரியில் டான்ஸ் ஆடி இருந்தேன்.

அப்போது நான் அந்த டான்ஸுக்கு ஏற்றார் போல கொஞ்சம் ஓப்பன் வைத்த உடையில் டான்ஸ் ஆடி இருந்தேன். ஆனால், நான் பிரேமம் படத்தில் நடித்து முடித்த போது பலரும் அந்த வீடியோவில் என் ஆடை விலகியதை பாஸ் செய்து சுட்டி காட்டி இருந்தனர். அது எனக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

அன்றில் இருந்தே நான் புடவையை கட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், என் பிள்ளைகளுக்கு எந்த உடையையும் அணியும் சுதந்திரத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்..சாய் பல்லவி பல முறை தன் பேச்சு மற்றும் செயலால் பாராட்டை பெற்று இருக்கிறார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement