• May 06 2024

விஜய்யை ,Kizhakku Vaasal serial மூலம் கிழித்துத் தொங்க விட்ட எஸ்.ஏ சந்திரசேகர்- இப்பிடி சொல்லியிருக்காரே

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான இயக்குநராக வலம் வந்தவர் தான் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அதே போல சின்னத்திரை சீரியலில் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் இவர் சுவாமியப்பன் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் வில்லனாக இருக்கும் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை எஸ்ஏசி கோயிலில் வைத்து வெளுத்து வாங்குகிறார். காரணம் தத்தெடுத்து வளர்க்கும் ரேணுகாவை ஆனந்த் பாபுவின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எஸ்ஏ சி முடிவெடுக்கிறார்.


ஆனால் பணக்காரராக இருக்கும் ஆனந்த் பாபு ரேணுவை  தன்னுடைய வீட்டு மருமகளாக்க முடியாது என கேவலமாக பேசுகிறார். உடனே எஸ் எஸ் சி தளபதி விஜய் மனதில் வைத்துக்கொண்டு சீரியல் வசனங்களால் வெளுத்து வாங்கி இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் எஸ்ஏசி விரும்பினார்.

அந்த சமயத்தில் தான் எஸ்ஏசி மற்றும் விஜய் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு தற்போது வரை பிரிந்து இருக்கின்றனர்.இதனால் இன்றுவரை எஸ்ஏசி மற்றும்  நடிகர் விஜய்  இருவரும் பேசாமல் தான் இருக்கின்றனர்.இதனால் கிழக்கு வாசல் சீரியலில் மகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சந்திரசேகர் பேசியுள்ளார் என்று கூறப்படுகின்றது.


‘ஒருவன் ஓவராக தண்ணி அடித்து விட்டால் போதையில் மயக்க வரும், தலை சுற்றும், என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் பேசுவார்கள். அதே மாதிரி தான் இப்பொழுது வசதியான வாழ்க்கை வந்ததும் பணக்காரனாக ஆகிவிட்டாய் என்று கண்ணு தெரியாமல் அலைகிறாய்! மனுஷனாக இருந்தால் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம், எப்படி வளர்ந்தோம், யாரால் வந்தோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார். இது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement