• May 19 2024

'ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா' பாடலைப் பாடி... அரங்கத்தை அதிர வைத்த ஈழத்துப் பெண் அசாணி... 'சரிகமப'வில் நடந்த சுவாரஷ்யம்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. 

குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசாணி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். மேலும் அந்த சிறுமி பணம் இல்லாமையினால் தான் தாமதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் பலருக்கும் இவர் மேல் ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.


இப்படியான நிலையில் இந்த வாரம் சரிகமபவில் Devotional Round நடைபெறுகின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பக்கித் பாடல்களைப் பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈழத்துச் சிறுமி அசாணி "ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா" என்ற பாடலைப் பாடி ஒட்டுமொத்த அங்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது நடுவர்களும் இவரது திறமையை பாராட்டி இருக்கின்றனர்.

இதோ அவர் பாடிய அந்தப் பாடல்..!


Advertisement

Advertisement