• May 03 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் கண்ணீர் வடிக்கும் ராபர்ட்-கோபத்தில் எழுந்து போன ரச்சிதா-வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு நகருகின்றது.அந்தவகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக அச்சு அசல் மாறி உள்ளது. 

இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கண்ணீர் வடித்து ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டு இருக்கும் போது எல்லோரும் சமாதானப்படுத்துகின்றார்கள்.ரச்சிதா வந்தும் பேசியும் கேட்காத ராபர்ட் எல்லாரையும் நம்பினேன் எல்லாரும் ஏமாத்திட்டாங்க எனக் கூறி கண்ணீர் வடித்து அழுகின்றார்.அப்போது பேச வந்த ரச்சிதாவையும் யாரும் என்னிட்ட பேசாதீங்க எனக் கூறியதும் கோபத்தில் அவரும் எழுந்து செல்கின்றார்.

இதோ அந்த ப்ரமோ..



Advertisement

Advertisement

Advertisement