• May 04 2024

லோகேஷ் கூட்டணியில் இருந்து திடீரென விலகிய ரத்னகுமார்?- இது தான் காரணமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா லீட் ரோலில் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக லோகேஷ் கனகராஜ் பல்வேறு யூடியூப் சேனல்களிலும் பங்குபற்றி பேட்டியளித்து வருகின்றார்.


இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயககவுள்ளார் என ஏற்கனவே அப்டேட் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது.. இதனிடையே தன்னுடைய உதவி இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.


ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நடிகை நயன்தாரா தற்போது விலகியுள்ளார்.இதையடுத்து இந்தப் படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்திலிருந்து ரத்னகுமார் விலகியுள்ளதாகவும் லோகேஷ் தயாரிப்பில் அடுத்ததாக ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் அவர் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தற்போது இந்தப் படத்திலிருந்து ரத்னகுமார் விலக மற்றொரு காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய்யின் உள்வட்ட மேனேஜரும், லியோ படத்தின் கோ ப்ரொட்யூசருமான ஜெகதீஷ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலிருந்து, ஜெகதீஷ் தயாரிப்பில் இணைய ரத்னகுமார் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தற்போது கூறப்படுகிறது. லோகேஷ் -ரத்னகுமார் இடையில் சிறப்பான புரிதல் இருந்து வந்தது. லியோ படத்திலும் ரத்னகுமார் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் லோகேஷ் தயாரிப்பிலிருந்து விலகியுள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement