தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா. சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா பகிர்ந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் குழந்தைத்தனமான நடத்தை மற்றும் கியூட்டான சிரிப்புக்கள் என்பவற்றை பிரதிபலிக்கின்ற வகையில் அமைந்த இப்புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை முற்றிலும் கவர்ந்துள்ளன.
ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தார். அந்தவகையில் இணையத்தில் தற்பொழுது வைரலாகியிருக்கும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் அவரது அடுத்த படத்திற்கான வாய்ப்பாகவே கருதப்படுகின்றது.
ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களில் இயற்கையோடு இணைந்து மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்பட்டார். இப்புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் "ராஷ்மி எப்பவுமே கியூட் தான்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படங்கள் வெளியான உடனேயே இளம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளது.
Listen News!