விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்-2. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில், இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில், கோமதி ராஜி கிட்ட மயில் என்ற ஒருத்தி இவ்வளவு நாளா இருந்தா என்பதையே மறந்திடுங்க என்கிறார். மேலும் அவளோட எந்தப் பொருளும் இந்த வீட்டில இருக்க கூடாது என்று சொல்லி எல்லாத்தையும் பாக்கியம் வீட்டிற்கு அனுப்பி விடுறார் கோமதி.
அந்தப் பொருட்கள் வீட்டிற்கு வந்ததைப் பார்த்த மயில் கோமதிக்குப் போன் எடுக்கிறார். அதைப் பார்த்த உடனே கோமதி எல்லாரும் மயிலோட நம்பரை ப்ளாக் பண்ணுங்க என்கிறார். அதைத் தொடர்ந்து மயில் கடைக்குப் போய் சரவணனைக் கூப்பிடுறார்.

மயிலைப் பார்த்த உடனே சரவணன் மரியாதையா நீ இங்க இருந்து போகல என்றால் நான் உன்ன என்ன பண்ணுவன் என்றே தெரியாது என்கிறார். பின் பாண்டியன் மயிலைப் பார்த்து முதலில இங்க இருந்து கிளம்பு என்கிறார். இதுதான் இனிநிகழவிருப்பது....
Listen News!