• May 06 2024

திடீரென தமிழ் வீட்டுக்கு போக ஆசைப்படும் ராகினி- அர்ஜுன் எடுத்த முடிவு- செம சந்தோசத்தில் கோதை- Thamizhum Saraswathiyum Serial

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராகினிக்கு குழந்தை பிறந்ததை நினைத்து சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது சரஸ்வதி, அத்தை ராகினி கூட தானும் இருக்க போறேன் என்று சொன்னாங்க. அவங்களுக்கு நான் சாப்பாடும் கொடுத்து விட்டிட்டேன். ராகினி எல்லாத்தையும் மறந்து எங்க கிட்ட அழுது பேசினது தான் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று சொல்கின்றார்.


இருந்தாலும் ஆடர் செய்து முடிக்க முடியுமா என்று தெரியலையே என்று நடேசனும் நமச்சியும் புலம்ப தமிழ் நம்பிக்கை தானே வாழ்க்கை பொறுமையோடு இருப்போம் என்கின்றார். பின்னர் விடிந்ததும் கோதை ஹாஸ்பிட்டலில் குழந்தையை வைத்து தாலாட்டிக் கொண்டிருக்க, அர்ஜுனின் அம்மா குழந்தையை வாங்கி தான் தாலாட்டுகின்றார்.

அப்போது அர்ஜுன் அவங்க வைச்சிருக்கட்டும் நீ குழந்தையைக் கொடும்மா என் சொல்லி விட்டு டிச்சார்ச் செய்வது எப்போது என்று கேட்கப்போகின்றார்.பின்னர் தமிழ் வீட்டார் எல்லோரும் வந்து ராகினி குழந்தையை கொஞ்சிட்டு இருக்கும் போது,ராகினி தன்னுடன் எல்லோரையும் வருமாறு அழைக்கின்றார்.


ஆனால் அவர்கள் மறுத்து விட சரஸ்வதி ராகினியை தங்களுடன் அழைத்துக் கொண்டு போவோம் என்று சொல்ல ராகினியும் தமிழ் வீட்டுக்கு போகட்டுமா என்று அர்ஜுனிடம் கேட்க அர்ஜுன் மறுப்புத் தெரிவித்து விடுகின்றார்.பின்னர் எல்லோரும் குழந்தையை கொஞ்சி விட்டு கோயிலுக்குச் செல்கின்றனர்.

கோயிலில் இருந்து தமிழ் ஆடரை எப்படி முடிச்சுக் கொடுக்கப்போகின்றான் என்றே தெரில,என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். டைமுக்கு ஆடர்ஸ் கொடுக்காவிட்டால் கம்பெனி பெயரே கெட்டிடுமே என்ன செய்வது என்று யோசிச்சுக் கொண்டிருக்க கோயில் மணி அடிக்கின்றது. இதனைக்கேட்டு எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.


மறுபுறம் ராகினியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் அர்ஜுனின் அம்மாவும் அக்காவும் அர்ஜுன் மனம் மாறிவிட்டதாக நினைத்து திட்ட அர்ஜுன் தன்னுடைய மாமாவை அடி பின்னி எடுத்ததோடு இவர் குடிச்சதால் தான் தமிழுக்கு நன்றி சொல்ல வேண்டியதாக போச்சு, அதுக்காக அவங்க செய்த துரோகம் எதையும் நான் மறக்கல என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement