• May 19 2024

திடீரென கோதை பக்கம் மனம் மாறிய ராகினி - கதறி அழுத கார்த்திக்- தமிழ் எடுத்த முக்கிய முடிவு -Thamizhum Saraswathiyum Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

எல்லோரும் வீட்டை விட்டு போய்ட்டாங்க என்ற சந்தோசத்தில் அர்ஜுனின் குடும்பத்தினர் விதம் விதமான சாப்பாடு சென்று ராகினியை சாப்பிடக் கூப்பிடுகின்றனர்.ராகினி சாப்பிடுவதற்கு வர மறுத்து விடுகின்றார். தொடர்ந்து சரஸ்வதி வீட்டில் வசு காய்கறி வெட்டுவதைப் பார்த்த தமிழ் நீ ஏன்மா இதெல்லாம் பண்ணுற என்று கேட்கின்றார்.


அதற்கு வசு நான் வசதியான வீட்டில இல்லை என்றால் என்ன மாமா என் குடும்பத்தோட இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாகத் தான் இருக்கு நீங்க கவலைப்பமாதீங்க மாமா என்கின்றார்.மறுபுறம் ராகினி சாப்பிட வராததால் அர்ஜுன் சென்று விசாரிக்க ராகினி நான் தப்பு பண்ணீட்டனோ என்று தோணுது.

அம்மா அப்பா இல்லாமல் நான் தனியா இருந்ததே இல்லை, இப்போ அவங்க இல்லாமல் இருக்க கஷ்டமாக இருக்கு என்று சொல்கின்றார். அப்போது அர்ஜுன் நான் வீட்டை விட்டு போகச் சொல்லலையே நம்ம கூட தானே இருக்கச் சொன்னோம் அவங்களா தானே போய்ட்டாங்க, உங்க அம்மா அப்பா திரும்ப வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கு ஆனால் எங்க அக்காவும் அப்பாவும் திரும்ப வராத இடத்துக்கு போய்ட்டாங்களே என்கின்றார்.


பதிலுக்கு அர்ஜுனின் அம்மாவும் தங்களுடைய சோகக் கதையை சொல்கின்றார். அத்தோடு தமிழ் அவங்களுக்கு சாப்பிடக் கொடுக்காமல் இருக்க மாட்டான் நீ வாம்மா வந்து சாப்பிடு என்று பேச ராகினியும் சாப்பிடப் போகின்றார். மறுபுறம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட தட்டு இல்லாததால் என்ன செய்வது என்று யோசிக்க நமச்சி நிலாச்சோறு சாப்பிடலாமே என்கின்றார்.

இதனால் கோதை எல்லோருக்கும் சாப்பாடு உருட்டிக் கொடுக்க தமிழும் வாங்கிச் சாப்பிடுகின்றார். அப்போது கோதை கண் கலங்குகின்றார். அத்தோடு கார்த்திக்கும் தமிழுக்கு செய்த துரோகத்தை நினைத்து அழுது தமிழிடம் மன்னிப்புக் கேட்க தமிழ் நானும் அர்ஜுன் நல்லவன் என்று தான் முதலில் நினைச்சேன்.


அதுக்கு பிறகு தான் அவனோட சுயரூபம் தெரிய வந்திச்சு, யாரும் கவலைப்பட வேணாம் நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிச்சு, இனி என்ன பண்ணலாம் என்று யோசிப்போம் என்று ஆறுதல்ப்படுத்துகின்றார். பின்னர் அர்ஜுன் ராகினி சோகமாக இருப்பதால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லி மொட்டை மாடியில் வைத்து பட்டாசு கொழுத்துகின்றார். இதை தமிழ் வீட்டிலிருந்து எல்லோரும் பார்க்கின்றனர்.


இனி இதெல்லாம் தேவையா என்று கேட்க, எல்லோருக்கும் தான் பிரச்சினை இருக்கு அதுக்காக சின்ன சின்ன சந்தோசங்களை கூட கொண்டாடாமல் இருந்தால் எப்படி என்று ராகினியை சமாதானப்படுத்துகின்றார். மறுபுறம் தமிழும் சரஸ்வதியும் நின்று இதைப் பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement