• May 06 2024

கோபியின் கழுத்தை நெரிக்கப் போன ராதிகா- ராமமூர்த்தி கொடுத்த பதிலடி- ஈஸ்வரியிடம் உண்மையை சொன்ன பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம். வீட்டுக்க வந்த கோபி ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சிக்க அவர் திட்டுகின்றார்.இதனால் ராதிகா ரூமுக்குள் எழுந்து சென்றுவிட்டதும் நாளுக்கு நாள் உன்னுடன் நிலைமை ரொம்ப மோசமா போய்க்கிட்டே இருக்குடா என கோபி புலம்புகிறார்.

தொடர்ந்து வீட்டுக்கு அனைவரும் வர ஈஸ்வர் கோபமாக உட்கார்ந்து இருப்பதோடு பாக்கியாவை திட்ட அனைவரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். பின்னர் ரூமுக்குள் ஈஸ்வரி இருக்க பாக்யா ஈஸ்வரியிடம் பேச முயற்சி செய்ய ஈஸ்வரி வெளியே போ என திட்டுகிறார். அத்தை நான் பண்ணுவது தப்பு தான் உங்க மேல இருக்க பயத்தில் தான் உங்ககிட்ட சொல்லல ஆனா எதுக்காக அப்படி பண்ணேன்னு மட்டும் கேளுங்க என கூறுகிறார்.


பிறகு ஈஸ்வரி எதுக்காக பண்ண என கேட்க பாக்கியா கேன்டீன் ஆர்டர் எடுக்க போனபோது ராதிகா இங்கிலீஷில் கேள்வி கேட்டு அவமானப்படுத்திய விஷயத்தை சொல்கிறார். உங்க மருமக யார்கிட்டயும் அவமானப்பட்டு நிற்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கிலீஷ் கிளாஸ் போனேன் இப்ப சொல்லுங்க நான் செஞ்சது தப்பா என கேட்க நீ இங்கிலீஷ்ல பேசணும் அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என ஈஸ்வரி கூறுகிறார். இவ்வாறு சமாதானம்செய்து விட்டு பாக்கியா வெளியே வருகின்றார்.

தொடர்ந்து கோபி இனியா மற்றும் மயூவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது இனியா கோபியை போட்டோ எடுத்த விடயத்தை மயூவுக்கு காட்ட ராமிகா வந்து போனை பறித்து பார்ப்பதோடு மயூவைத் திட்டுகின்றார்.பிறகு ராதிகா ராமமூர்த்தியிடம் நீங்க எதுக்கு அங்க போனீங்க? உங்களுக்கும் பாக்யாவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க ராமமூர்த்தி அவ என் மருமகள் என சொல்ல நான் தானே உங்க மகனோட பொண்டாட்டி அப்போ நான் தான் உங்க மருமகள் என சொல்ல ஒரு நாளும் உன்னை எங்க மருமகளா ஏத்துக்க முடியாது, இவன் பாக்யாவுக்கு பண்ணிட்டு வந்தது பச்சை துரோகம். என்ன நடந்தாலும் நாங்க பாக்கியா கூடத் தான் இருப்போம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.


உடனே ராதிகா அப்போ எதுக்கு எங்க வீட்ல இருக்கீங்க என கேட்க ராமமூர்த்தி சரியா கேட்ட நான் ஒன்னும் என் மகனோட வீடு, என் மருமக நீ என்ற உரிமையில் இருக்கல என் பேத்தி இங்கே இருக்கா, அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று தான் இருக்கேன் என சொல்கிறார்.


அடுத்து ராமமூர்த்தி இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே செல்ல ராதிகா கோபியிடம் பார்த்தீர்களா உங்க அப்பா என்னை எவ்வளவு அவமானப்படுத்துகிறார் என்று, உங்க அம்மாவும் அப்பாவும் நான் தான் அவங்க மருமகள் என்று அவங்க வாயால சொல்லனும், நீங்க சொல்ல வைக்கணும் அதுக்கப்புறம் என்கிட்ட பேசுங்க என கோபிக்கு கூறி விட்டு உள்ளே செல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement