• May 19 2024

முதன்முறையாக மூர்த்தி மீது கோபப்பட்டு பேசிய ஜீவா- அதிர்ச்சியில் உறைந்த மொத்தக் குடும்பம்- கதிர் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த வகையில் அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கடைக்கு வரும் மூர்த்தி கடை அரைவாசியில் பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றார். மேலும் கடையில் நின்ற சனத்திற்கு பொருட்களைப் கொடுத்து அனுப்பி விட்டு அங்கு வரும் குமரேசன் மாமாவைத் திட்டுகின்றார். அப்போது குமரேசன் நான் பூட்டவில்லை ஜீவா தான் கடையைப் பூட்டிட்டு போயிருக்கணும் என்று சொல்கின்றார்.


பின்னர் வீட்டுக்கு வந்ததும் மூர்த்தி ஜீவாவைத் திட்டுகின்றார்.கடைய யாரும் பாதியில பூட்டிட்டு போவாங்களா என்று கேட்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஜீவா மூர்த்தியைப் பார்த்து நீங்க ஏதோ காசு கொடுத்திட்டு போன மாதிரி கேட்கிறீங்க. கல்லாப் பெட்டியை எதுக்கு பூட்டிட்டு போனீங்க என நிறைய கேள்விகளை கேட்கின்றார்.

இதனால் மூர்த்தியுடன் மொத்தக் குடும்பமும் அதிர்ச்சிக்குள்ளானது. பின்னர் ஜீவாவை சமாதானம் செய்யவும் ஜீவா கோபித்துக் கொண்டுட வெளியில் சென்று நிற்க அங்கு வரும் தனம் மூர்த்தியை நீ இப்படி திட்டி இருக்கக் கூடாது என ஜீவாக்கு அட்வைஸ்ட் பண்ண அது மாதிரி கதிரும் வந்து அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.


பின்னர் மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கலாம் வா என்று கதிர் ஜீவாவின் கையைப் பிடித்து இழுக்க ஜீவா விடு கையை என்று உதறி விட கதிரும் தனமும் உள்ளே செல்கின்றனர். பின்னர் அங்கு வரும் மீனாவிடம் ஜீவா, நீயும் திட்ப் போறியா திட்டு நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி எல்லோரும் திட்டுறாங்க நீயும் பதிலுக்கு திட்டு என்று சொல்கின்றார். ஆனால் மீனா பொறுமையாக பேச ஜீவா நீயாவது என் கூட இரு என்னால முடியல என்று சொல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement