• May 04 2024

போலீஸ் நிலையம் வரை சென்ற ரச்சிதா... தொடரும் வழக்கு... விவாகரத்துக் குறித்து வெளிப்படையாகப் பேசிய தினேஷ்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதாவும், சீரியல் நடிகர் தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் நன்றாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.


இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் ஒன்றினை ரச்சிதா அளித்திருந்தார். அதாவது சில நாட்களாக தினேஷ் தனக்கு ஆபாசமாக செல்போனில் மெசேஜ் செய்து வருவதாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் அப்புகார் மூலமாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் தினேஷ் ஆஜரானார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தினேஷ் பேசும்போது பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது தனக்கும் ரச்சிதாவிற்கும் இடையே தற்போதுவரை விவாகரத்து வழக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது பிக்பாஸில் ரச்சிதா கலந்துகொண்ட போது அவர் வெற்றிப்பெற வேண்டும் என நினைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் "ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றி பெற்று கொடுக்கலாம். இருப்பினும் எனக்கு பிக்பாஸில் கலந்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை, இப்போது சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார் நடிகர் தினேஷ்.

Advertisement

Advertisement

Advertisement