தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகின்றார். இதனால் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் அமைந்துள்ள அமீர் பீன் தர்காவிற்குச் சென்று வழிபாடு நடத்தி இருக்கின்றார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் விஷால் முஸ்லீம் மதத்திற்கு மாற இருக்கின்றாரா எனக் கேள்வி கேட்டு வருவதோடு, அவர் மதம் மாறிவிட்டார் எனவும் சமூக வலைத்தளங்களில் ஒரு சில வதந்திகள் பரவி இருந்தன.
இதனைத் தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த அவர் "நான் மதம் மாறவில்லை. கடப்பாவிற்கு பல முறை படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். அப்போதெல்லாம் இந்த அமீர் பீன் தர்காவிற்கு வரவேண்டும் என நினைப்பேன். படப்பிடிப்புக் காரணமாக வர முடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் இப்போது தான் இந்த தர்காவிற்கு வந்து வழிபாடு செய்திருக்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை அல்லாஹ், வெங்கடேஸ்வரா சாமி, இயேசு எல்லாரும் ஒன்று தான். மதம் என்ற ரீதியில் பிரிவினை கிடையாது.அனைத்து மதக் கடவுள்களையும் மதிக்கக் கூடியவன் தான் நான்" என்று கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "100 ரூபா செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்" என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கின்றார்.
Listen News!