தென்னிந்தியாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் Babloo பிரித்விராஜ். 90-களில் பல்லாயிரக்கணக்கான பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்த இவர், பின்னாளில் நெடுந்தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரித்விராஜ், அவரது வாழ்க்கை, இழப்புகள், முன்னாள் மனைவியுடன் நடந்த உறவுகள், தியாகங்கள் மற்றும் அவருடைய மனநிலை என்பவற்றை ஆழமாக பகிர்ந்திருக்கின்றார்.
பேட்டியின் போது அவரிடம், "நீங்கள் வாழ்க்கையில் நிறைய சம்பாதிச்சிருப்பீங்க, ஆனால் நீங்கள் இழந்த ஒரு விஷயம் இருக்கா?" என்று கேட்டதற்கு, அவர் மிக ஆழமான உணர்வோடு பதிலளித்திருந்தார். மேலும், “நம்ம வாழ்க்கையில் எதையும் சம்பாதிக்க முடியும். ஆனா ‘நேரம்’ போயிடுச்சுன்னா, அதைக் கைப்பற்ற முடியாது. அதை திரும்பத் திருப்ப முடியாது. " எனவும் கூறியிருந்தார்.
அத்துடன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவரது முன்னாள் மனைவி பற்றிய கேள்விகளையும் அதன்போது எழுப்பியிருந்தார். "உங்களோட Ex-Wifeஐ பாத்தீங்கன்னா என்ன கேட்பீங்க?" என்ற கேள்விக்கு பிரித்விராஜ் “She is a perfect woman. அவங்க வாழ்க்கையில் ரொம்ப focus-ஆ இருக்காங்க. நம்ம இருவருக்கும் குழந்தை பிறந்தப்போ, அவங்க தன்னுடைய கரியரை sacrifice பண்ணி teaching-லயும் counseling-லயும் போயிட்டாங்க. ரொம்ப பெரிய தியாகம் அது. அதை நான் மறக்கமாட்டேன்.” எனவும் கூறியிருந்தார்.
இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் ரசிகர்கள் “#BablooPrithiveeraj”, “#PerfectWoman” போன்ற ஹாஷ்டாக்குகளில் அவருடைய பேச்சுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!