• May 10 2024

இத்தாலியில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கிய பிரபாஸ்- அதன் ஒரு மாத வாடகை எவ்வளவு தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாபாகுபலி திரைப்படத்தின் மூலம்  உலக ரசிகர்களை ஈர்த்த நடிகராக மாறியவர் தான் பிரபாஸ். இப்படத்தைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என 3 படங்கள் ஃபிளாப் ஆகி அவருக்கு ஹாட்ரிக் தோல்வியைத் தழுவின.

ஹீரோவை விட அந்த படத்தை இயக்குவது யார் என்பது தான் முக்கியமே என்பதை ரசிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர். கதை நன்றாக இல்லையென்றால் ஹீரோ யாராக இருந்தாலும் ஃபிளாப் கன்ஃபார்ம் தான்.


பாகுபலி படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனை செய்த நிலையில், பிரபாஸின் மார்க்கெட் எகிறியது. அடுத்தடுத்து பல நூறு கோடிகளில் உருவாகும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிரபாஸுக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர். இந்நிலையில், அடுத்ததாக சலார், ப்ராஜெக்ட் என இரு பெரும் படங்கள் திறமையான இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில், படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் மீண்டும் தனக்கு கம்பேக் கிடைக்கும் என பிரபாஸ் காத்திருக்கிறார்.

இந்நிலையில், சம்பாதிக்கும் அதிகமான பணத்தைக் கொண்டு இத்தாலியில் நடிகர் பிரபாஸ் வில்லா ஒன்றை வாங்கி உள்ளார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன. மேலும், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனி ஜெட் விமானத்தில் தனது நண்பர்களுடன் அங்கே சென்று ஓய்வெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.


இத்தாலியில் பல கோடி போட்டு வாங்கி உள்ள அந்த வில்லாவை டூரிஸ்ட்களுக்கும், அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கும் நடிகர் பிரபாஸ் வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் அதன் மூலம் மாதம் 40 லட்சம் அவருக்கு கிடைப்பதாகவும் ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக நடிகர் பிரபாஸ் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement