விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்து பட்டையை கிளப்பினார்.
இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிற்கு பல படங்கள் ஹிட் கொடுத்த இவர் நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்யார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். வித்தியசமான கதைகளத்துடன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தை ஸ்டார் குரூப் இதுவரை இல்லாதளவு மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!