• Apr 30 2024

பிக்பாஸ் விதியை மீறும் மேக்கப் ராணி; கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் பிரதீப்! கேப்டன்சியை தியாகம் செய்வாரா பூர்ணி..?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சி  18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய நிலையில் 3 பேர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர். அத்துடன், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலுள்ள விதிமுறையை மீறும் விதத்தில் நடந்து கொண்ட பூர்ணிமாவின் கேப்டன்சிகே கிடைத்த கேப்பில் எல்லாம் ஆப்பு வைத்து வந்துள்ளார் பிரதீப்.

அதன்படி, மேக்கப் பொருட்களை உபயோகிக்க கூடாது என பிக்பாஸ் கூறியுள்ள நிலையில், பூர்ணிமா அதை மீறும் விதமாக தனது உதட்டிற்கு நெய்யை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தி தன்னை அலங்கரித்துக் கொண்டுள்ளார்.இதை அவதானித்த பிக்பாஸ் அவரை கண்டிக்கிறார்.  

எனினும், பூர்ணிமா செய்ததை ஏனைய போட்டியாளர்கள் Fun-ஆக பார்த்தாலும், பிரதீப் மட்டும் திடீரென கோபமாகி 'நீ உன் மேக்கப்பை தியாகம் செய்ய முடியாது என்றால், நாங்கள் மட்டும் ஏன் எங்கள் பசியை தியாக செய்யணும். நீ இப்படி செஞ்சதுக்கு இந்த வாரம் வாயவே திறக்க கூடாது, இல்லை கேப்டன்சியை தியாகம் செய்ய வேண்டும்' என கூறுகிறார்.

 இதற்கு பூர்ணிமா 'கேப்டன்சியை விட்டு கொடுக்க மாட்டேன்' என கோபமாக  கூறுகிறார். இதற்கான தண்டனை பிக்பாஸ்ஸிடம் இருந்து கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement

Advertisement