தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் மணிரத்னம்.இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பலர் படமாக்க முயற்சித்து பின்னர் முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர்.
உலகளவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இவ்வாறுஇருக்கையில், இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 150 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Listen News!