• May 04 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு- அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நாளை தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார்.சோழ மன்னர்களின் வரலாற்றையே இப்படமானது எடுத்துக் காட்டுகின்றது.இப்படத்திற்கான எதிர்பார்பானது உலக சினிமா ரசிகர்கள் அனைவரிடத்திலுமே நிலவி வருகிறது.

மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.


இந்நிலையில் நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுமார் 20045க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிட  தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பதும் முக்கியமாகும்



Advertisement

Advertisement

Advertisement