• May 05 2024

தன்னுடைய பெற்றோரை வீட்டை விட்டுத் துரத்திய பொன்னி- தடுத்து நிறுத்திய துளசி- இனி நடக்கப்போவது என்ன?

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல. இந்த சீரியலில் தற்பொழுது ராஜபாண்டிக்கு துளசி கர்ப்பமாக இல்லை என்ற விஷயம் தெரிந்து விட்டது. இதனால் ராஜபாண்டி துளசியை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

பின்னர் பஞ்சாயத்தில் ராஜபாண்டியைக் கத்தியால் குத்தியது பொன்னியின் அப்பா தான் என்ற விஷயமும் தெரிந்து விட்டதால் ராஜபண்டி துளசியை தாலியைக் கழட்டித் தரச் சொல்லி அடம் பிடிக்கின்றார். அத்தோடு துளசியைப் பற்றி தவறாகப் பேசியதால் துளசி ராஜபாண்டியை  செருப்பால் அடித்தார்.


இதனால் இனிமேல் துளசியும் ராஜபாண்டியும் சேருவார்களா அல்லது நிரந்தரமாகவே பிரிந்து விடுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாது பொன்னி தன்னுடைய வீட்டை விட்டு அவருடைய அம்மா அப்பாவைத் துரத்துகின்றார். இதைப் பார்த்த துளசி அவங்கள வீட்டை வட்டு துரத்தினால் எல்லாம் சரி ஆகிடுமா எனக் கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement