• Apr 26 2024

திடீரென ரசிகர்களை நேரடியாக சந்திக்கவுள்ள விஜய்... ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


அதுமட்டுமல்லாது இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்களும் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் தான் தற்போது வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகம் ஆனது சமீபத்தில் பொங்கலுக்கு ஆந்திராவில் வெளியாகும் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும் என அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது.

இதனால் வாரிசு படத்திற்கு தெலுங்கில் திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த அறிவிப்பிற்கு தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக வாரிசு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற அபாயமும் படக்குழுவினரிடையே எழுந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் திடீரென தன் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அந்தவாக்கியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்தாலோசித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறாராம் விஜய்.

மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திடீரென விஜய் இவ்வாறு ரசிகர்களை சந்திக்கின்றார். அத்தோடு வாரிசு திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்களை சந்திக்க இருக்கின்ற இந்த செய்தி தான் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement