• Sep 08 2024

100 கோடிவரை கல்லா கட்டி ஓடிடிக்கு தயாரான ‘அரண்மனை 4'.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த திரைப்படம் தான் அரண்மனை 4 . இந்த திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் நடிகை தமன்னா, ராசி கன்னா, கோவை சரளா, ஜோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

2014 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகத்தை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார் சுந்தர்.சி. அதற்குப் பிறகு அதனுடைய இரண்டாம் பாகம் 2 வருடங்கள் கழித்து வெளியாகி சாதனை படைத்திருந்தது. அதன் பின்பு மூன்றாவது பாகத்தை 5 வருடங்கள் கழித்து எடுத்திருந்தார். ஆனாலும் முதல் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வெற்றி மூன்றாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை. ஆனாலும் வசூலில் சாதனை படைத்திருந்தது.

கடந்த மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றிருந்தது. 100 கோடி கிளப்பில் இணைந்தது.


இந்த நிலையில், அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தில் ஓடிடி  ரிலீஸ் பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

அதன்படி அரண்மனை 4 படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஸ்டார் வாங்கியுள்ளது. அதேபோல சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படம் எதிர்வரும் ஜூன் 14ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement

Advertisement