• May 06 2024

கோபியை பார்க்க ராதிகா வீட்டிற்கு விரையும் பாக்கியாவின் குடும்பம்! ஆகமொத்தம் தரமான சம்பவம் இருக்கு..!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிட்டலில் இருக்கும் கோபிக்கு இப்போ நோர்மலாக இருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ராதிகா. 

இதையடுத்து, இப்பவே கோபியைப் பார்த்தாகனும் என்று கிளம்பி ராதிகா வீட்டுக்கு மயூவையும் செழியனையும் கூட்டிட்டு போவதற்கு முனைகிறார் ஈஸ்வரி . 


எனினும், அவருக்கு இப்ப எல்லா செக்கப்பும் டெஸ்டும் எடுத்தாச்சு எல்லாம் நோர்மலா தான் இருக்கு பயப்பட வேண்டாம் என செழியன் சொல்லுகிறார்.

ஆனாலும், இத யாரு அவளா சொன்னா? என ராதிகாவை சாட்டி கேற்கிறார் ஈஸ்வரி. இதனிடையே அவருக்கு ஒன்டும் நடக்காது. அவரால எங்களுக்கு தான் ஹட் அட்டாக் வருமென இடையில் எழில் கூறுகிறார். அதற்கு இப்பையா உனக்கு கருத்து சொல்லனுமென அதட்டுகிறார் பாட்டி.

இதையடுத்து, இப்ப போகணும்னா ராதிகா வீட்டுக்கு தான் போகணும் என இழுத்தடிக்கிறார் கோபியின் அப்பா. இனியாவும் நான் அப்பாவ பாத்தே ஆகணுமென அடம்பிடிக்கிறார்.


இறுதியாக இவங்க சொன்னா கேக்க மாட்டங்க, அம்மாவையும் இனியாவையும் கூட்டி போய்ட்டு வா என செழியனுக்கு கூறுகிறார் தாத்தா.

அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றார் பாக்கியா . இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement