சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் ஜனனி அசோக்குமார். பல தொடர்களில் தனது மென்மையான நடிப்பால் புகழ் பெற்ற இவர், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகின்றார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு சாறி புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. படத்தை விட அதிக கவனத்தைப் பெற்றது அதனுடன் இணைத்த உணர்ச்சி நிறைந்த பதிவு தான்.
அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களில், ஜனனி சாறி அணிந்து எளிமையான அழகுடனும் கிளாமரான போஸினாலும் காட்சியளித்துள்ளார். இவைகள் பார்ப்போரின் மனதில் நெகிழ்வையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களுடன்,"இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்! மீண்டும் ஒரு கணம் சந்திப்போமா?" என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். வைரலான போட்டோஸ் இதோ..
Listen News!