• May 08 2024

ஒரு குழந்தையே போதும்- Neeya Naana நிகழ்ச்சியில் இந்த வாரம் நடக்கவுள்ள சம்பவம்- சுவாரஸியமான தலைப்பாக இருக்கே...

stella / 8 months ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பல ஆண்டுகளாக  சுவாரஸ்யம் குறையாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இரு தலைப்புகளில் இருதரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.இந்த நிகழ்ச்சி தொடாத டாப்பிக்கே இல்லை என்று கூறுமளவில் நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்பான பல தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

அந்த வகையில் இந்த வாரமும் நிகழ்ச்சியில் சிறப்புத் தலைப்பு கொடுக்கப்பட்டது.தங்களுக்கு ஒரு குழந்தை போதும் என்பவர்கள்  மற்றும் ஒரு குழந்தை போக்கு சரியில்லை என்பவர்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு குழந்தை போதும் என்றவர்கள் பல விஷயங்களை முன் வைத்தனர்.


 நிதி நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்தது என்றும் ஒரு பெண் கூற, 4 முதல் 5 மணி நேரங்கள் பிரசவ வலியால் துடித்ததை நினைத்து தான் ஒரு குழந்தையே போதும் என்று முடிவெடுத்ததாக மற்றொரு பெண் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மற்றொரு பெண்ணோ, ஒரு குழந்தையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டார்.

தன்னுடைய முதல் குழந்தை பிறந்தபோது பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில் தனக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தனக்கு முழுமையான ஓய்வை கொடுத்துவிட்டு கணவர் இரவு முழுவதும் குழந்தையை பார்த்துக் கொண்டதாக ஒரு பெண் குறிப்பிட்டார். தொடர்ந்து மறுநாள் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு குழந்தையை பார்த்துக் கொண்டதாகவும் அந்த கஷ்டத்தை அவருக்கு மீண்டும் கொடுக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து பேசிய அவரது கணவர், தன்னுடைய மனைவி பிரசவ வலி மற்றும் ஆபரேஷன் வலி என இரண்டையும் தாங்கிக் கொண்டதால் தான் அட்லீஸ்ட் குழந்தையாவது பார்த்துக் கொண்டு, மனைவிக்கு ஓய்வு கொடுக்க நினைத்ததாக கூறினார். இதைக் கேட்ட கோபிநாத், இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக லவ் செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். இதைக்கேட்ட சக போட்டியாளர்களும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு குழந்தை போதும் என்பதே இந்த தம்பதியின் முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement