• May 05 2024

இரண்டு மனைவிகளுடனும் வீட்டுக்கு வரும் பூமி- முத்தழகு சீரியலில் நடக்கப் போகும் புதிய டுவிட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள்மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் மதிய நேரத்தில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் முத்தழகு விவசாயம் பார்க்கும் பெண் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் ஊர்த்தலைவியின் மகனான பூமியைத் திருமணம் செய்திருக்கின்றார்.

சில நாட்கள் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார் முத்தழகு. இருப்பினும் பூமி, தான் இறந்து விட்டதாக நினைத்த அவரது முதல் மனைவியான அஞ்சலி மீண்டும் வந்து விடுகின்றார்.

இதனால் பூமியுடன் யார் சேர்ந்து வாழப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்பொழுது இருவரையுமே பூமி திருமணம் முடித்து வீட்டுக்கு வருவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே எனக் கூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement