• May 18 2024

நயன்தாரா செய்த செயல்… திணறிய கொச்சி ரெஸ்டாரெண்ட்; நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று பல பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அத்தோடு திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது.

இவ்வாறு இருக்கையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நயன்தாராவின் தாயார் அவரது திருமணத்திற்கு வரவில்லை. இதனால் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க கணவருடன் பிறந்த வீட்டிற்கு மறுவீடு சென்றுள்ளார் நயன்தாரா.

மறுவீடு சென்ற இடத்திலும் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார். இந்நிலையில் கொச்சியில் பனம்பில்லி நகரிலுள்ள மன்னா ரெஸ்டாரெண்ட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது அம்மாவுடன் சென்றுள்ளார் நயன்தாரா. இரவு 11 மணிக்கு ரெஸ்டாரெண்டுக்கு சென்ற நயன்தாரா அங்கு உள்ள ஸ்பெஷல் ஐட்டம்களை ருசி பார்த்துள்ளார்.

அன்று பகல் அந்த ஹோட்டலில்தான் லஞ்ச் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார் நயன்தாரா. அதனால் கவரப்பட்ட நயன்தாரா இரவு டின்னருக்கும் அதே ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அத்தோடு நயன்தாராவின் வருகையை சற்றும் எதிர்பாராத ஹோட்டல் ஊழியர்கள் சந்தோசத்தில் திணறிப் போயுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement