• May 06 2024

சாப்பாட்டில் மோகம் கொண்ட ப்ரியா... படம் பிடிக்கின்ற போட்டோகிராபர் பாவம்... கமெண்டுகளைத் தெறிக்க விடும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா மோகம் ஒட்டிக் கொண்டது. 


அந்தவகையில் 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதுகளைப் பெற்ற இவர் அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் 'மான்ஸ்டர்' படத்தில் நாயகியானர்.

அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய பின்னர் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்த ப்ரியா பவானி, 'மாஃபியா அத்தியாயம்' மற்றும் 'டைம் என்ன பாஸ்' போன்ற வெப்தொடர்களிலும் தோன்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து பின்னர் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் 'களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளியான 'யானை' படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ப்ரியா பவானி சங்கர். ஹரி இயக்கிய  இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக ஒரு சில ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ப்ரியா பவானி சங்கர் டாப் டென் நாயகளில் ஒருவராக குறுகிய காலத்தில் இடம்பிடித்து விட்டார்.

அந்தவகையில் தற்போது 'யானை' படத்தை தொடர்ந்து தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து முடித்துள்ள ப்ரியா பவானி தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் 'பொம்மை', அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'ஹாஸ்டல்', ஜெயம் ரவியுடன் 'அகிலன்',  உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறாக படங்களில் அதிகளவில் மோகம் கொண்டு விளங்குகின்ற ப்ரியா சாப்பாட்டிலும் அதிகளவு பிரியம் கொண்டவர். அடிக்கடி விதம் விதமான உணவுகளை உட்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவது வழமை. 


அந்த வகையில் தற்போதும் ரெட் உடையணிந்து தான் உணவு உட்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களை படம் பிடிக்கின்ற போட்டோகிராபர் பாவம்" என கூறி தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு காரணம் இவர் தான் என்ன செய்தாலும் அதனை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்வதனை சமீபகாலமாக வழக்கமாக கொண்டிருக்கின்றமையே ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement