சன் டிவியில் பிரபல சீரியல் கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, அர்னவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், முன்னதாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின. அது குறித்தான போட்டோக்களும் வைரலானது.
இதனை உறுதி செய்யும் விதமாக திவ்யா தான் மதம் மாறி அர்னவை திருமணம் முடித்ததாகவும் தான் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து சில நாட்கள் கழித்து தனது கணவன் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாகவும் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.அத்தோடு அவர் ஒரு சைக்கோ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஆனால் இது எதுவுமே பலிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிரடியாக போலீஸார் கைது செய்தனர். இதனை அடுத்து தற்பொழுது திடுக்கிடும் தகவல் ஒன்றை மலேசியாவைச் சேர்ந்த திருநங்கையான பிரியதர்சினி கூறியுள்ளார்.
அதாவது அவர் சென்னையில் படிப்பதற்காக தங்கியிருக்கும் போது இருவரும் காதலித்து வந்ததாகவும் அதன் பின்னர் இருவரும் நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்தாகவும் கூறினார். மேலும் அர்னவ் அடிக்கடி போன் பண்ணி பேசுவதாகவும் இருவரும் அடிக்கடி தப்பாக நடந்ததாகவும் நீ என் கிட்ட வரலைனா நான் செத்திடுவேன் என்றெல்லாம் கூறினார். பின்பு நான் திருநங்கை என்ற காரணத்தை காட்டி தன்னை விலக்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல் அர்னவ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதோடு திவ்யாவுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
Listen News!