விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர்கள் தான் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி. இவர்கள் கணவன் - மனைவியாக கலந்து கொண்டு, கிராமத்து மனம் கமழும், நாட்டுப்புற பாடல்களை படி ரசிகர்கள் மனதை க் கவர்ந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ராஜலக்ஷ்மி பைனலுக்கு வரவில்லை என்றாலும், செந்தியில் கணேஷ் பைனல் வரை சென்றதோடு டைட்டில் வின்னராகவும் தேர்வாகினார்.இதற்காக அவருக்கு விஜய் டிவி வழங்கிய 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்தது.
விஜய் டிவி மூலம் கிடைத்த வெற்றியையும், பிரபலத்தையும் சரியாக பயன்படுத்தி கொண்ட செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவரும், தற்போது பல படங்களில் பின்னணி பாடி வருவது மட்டும் இன்றி, வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதனால், மிக குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து வீடு, கார், நகை என பிளான் போட்டு செலவு செய்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தங்களுடைய சொந்த ஊரில், மிகவும் கச்சிதமான வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசம் செய்த இந்த ஜோடி தற்போது பிரமாண்ட லக்ஸூரி வீட்டை கட்டியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இவர்கள் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
செந்தில் - ராஜலக்ஷ்மியின் கனவு வீடான இதில், ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்துள்ளனர். இந்த வீட்டின் கிரகப்ரவேசத்தையம் குடும்பத்தினருடன் பிரமாண்டமாக இவர்கள் செய்து முடித்துள்ள நிலையில், பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!