• May 18 2024

ஏமாற்றிய நயன்தாரா..? குழந்தைகளால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் நானும் ரௌடி தான் என்னும் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி,விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார்.


இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

தங்களுடைய குழந்தைகளுக்கு உயிர் - உலகம் என்ற அர்த்தத்தில் வித்தியாசமான பெயர் சூட்டி உள்ள இவர்கள் இதுவரை காலமும் தங்களது மகன்களின் முகங்களை வெளி உலகிற்கு காட்டாமலே வளர்த்து வந்தார்கள்.


இந்நிலையில் இன்றைய தினம் இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக நயன்தாரா தன் மகன்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆனது ரசிகர்களுக்கு சற்று குழப்பத்தை உண்டாக்கி இருக்கின்றது. ஏனெனில் ஓணம் பண்டிகையில் வெளியிட்ட புகைப்படத்தில் பார்க்கும் போது குழந்தைகள் பெரிதாக உள்ளனர்.


ஆனால் தற்போது வெளியிட்ட வீடியோவில் மிகவும் சிறியவர்களாக உள்ளனர். எனவே குழந்தைகளை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக முன்னர் எடுத்த வீடியோவைத்தான் நயன்தாரா எடிட் செய்து தற்போது வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement