• Apr 27 2024

நான்கு தலைமுறை நடிகர்களின் படங்கள் ஓடிய பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா

stella / 11 months ago

Advertisement

Listen News!


நடிகை நயன்தாரா, ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து பிரபல்யமானார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். 


இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர்.இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் பிரபலமான அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது. 


திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட இடத்தில் புதிய தியேட்டரை கட்ட நயன்தாரா திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என நான்கு தலைமுறை நடிகர்களின் திரைப்படங்கள் இந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளன. 1004 இருக்கைகளுடன் செயல்பட்ட அகஸ்தியா திரையரங்கம் சென்னையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றாகும்.

Advertisement

Advertisement

Advertisement