• Apr 18 2024

முதன்முதலாக தன்னுடைய குழந்தையின் போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்த பூர்ணா- வாவ்..... கியூட்டான பேபி

stella / 10 months ago

Advertisement

Listen News!


கேரளாவைச் சேர்ந்த, மலையாள பைங்கிளியான நடிகை பூர்ணா இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே, தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர், பார்ப்பதற்கு நடிகை அசின் போன்றே இருக்கிறார் என்றும், இவர் அசினின் சகோதரியா? என்று கூட இவர் நடிகையாக அறிமுகமான போது பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.


தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார் பூர்ணா. குறிப்பாக தமிழில், இவர் நடிப்பில் வெளியான கொடைக்கானல், வேலூர் மாவட்டம், சகலகலா வல்லவன், போன்ற  பல படங்களில் அடுத்தடுத்து நடித்தாலும், இவரால் முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க முடியாமல்போனது .


சமீப காலமாக கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பூர்ணா நடித்த காப்பான், தலைவி, போன்ற படங்களில் நடித்தது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.


திரையுலகில் வாய்ப்பு குறைய துவங்கிய பின்னர், துபாயில் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த ஆண்டு நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழாவையும் சிறப்பாக கொண்டாடி இருந்தார். இப்படியான நிலையில் நடிகை பூர்ணா தன்னுடைய குழந்தையை போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement