வாடகை தாய் முறை மூலம் விக்கி - நயன் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து உறவினர்கள் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்கள்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியிலுள்ள நட்சத்திர ஹேட்டலில் இடம்பெற்றது.
6 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவனை அண்மையில் திருமணம் முடித்தார் நயன்தாரா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். திருமணமான நான்கு மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதென தெரிவித்தார்.
மேலும் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு நிறைய சட்ட விதிகள் இருக்கும் போது, இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து, விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அளித்த பேட்டியில், தாய்மை அடைவது என்பது பெரிய விஷயம். ஆனால் கல்யாணமாகி 4 மாதத்தில் குழந்தை பிறந்தது என்பதை பற்றி என்ன சொல்வது. வெளியேவே சொல்ல முடியவில்லை. ஏதேதோ கேட்கிறார்கள் என்னை. அதனால் வெளியேவே தலைகாட்ட முடியவில்லை. இதனால் வெளியே செல்வதை குறைத்துக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் பெரியம்மா பிரேமா இது குறித்து கூறுகையில் , கல்யாணத்திற்கு முன்பே இவர்கள் எல்லாம் ரெடி செய்துவிட்டனர். இதனால்தான் கல்யாணம் ஆனதும் 4 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. 10 மாதத்திற்கு முன்பே இவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இப்பொது கல்யாணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது என்று விமர்சித்துள்ளர்.
Listen News!