• May 10 2024

நயனும் விக்கியும் போகாத கோயிலே இல்லையா… மறுபடியும் வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகை நயன்தாராவும், முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து ஜூன் 9 ஆம் திகதி மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்

இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமண நட்சத்திர ஹோட்டலில் திரைப் பிரபலங்கள் ,அரசியல்வாதிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து வாழ்த்துக்கள் கூறிய நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே இவர்கள் இருவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவுல்லாவுக்கு சென்றுள்ளனர்.ஏனெனில்,உடல்நலக்குறைவு காரணமாக திருமணத்திற்கு வராத நயன்தாராவின் தாயாரிடம் ஆசி பெறுவதற்காக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்போது கோவில் சார்பாக மரியாதையையும்,நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வந்த நயன்-விக்கி தம்பதியினருடன் இணைந்து ரசிகர்கள் போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.

இந்த போட்டோக்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன. கேரள மாநிலத்தில் பழமைவாய்ந்த கோவிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே இவர்கள் காதலித்து வரும் போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோயில் வழிபாடு செல்பவர்கள் என்பதும், இவர்கள் தென் இந்தியா வட இந்தியாவில் போகாத கோவில்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement