• Sep 19 2024

தேவயானி புருஷனை தேசவிரோதி ஆக்கிய நகுல்! எப்படி தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் மிக முக்கியமானவர்தான் நடிகை தேவயானி. இவர் இன்றும் பலரின் கனவுக்கனியாக காணப்படுகின்றார்.

இவர் புகழின் உச்சியில் இருந்த போது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் கொண்டு வீட்டார்களையும் எதிர்த்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். தேவயாணி சில காலங்கள் படங்களில் நடித்து வந்த போதும் பட வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் கால் பதித்தார்.

அதன்படி முதன்முதலாக கோலங்கள் என்ற சீரியலில் நடித்த தொடங்கினார். தேவயானி அந்த சீரியல் பல சாதனைகளை செய்தது.

தேவயாணியை ராஜகுமாரன் இவர் இயக்கிய 'நீ வருவாய்' என்ற படத்தின் மூலம் தேவயானி, பார்த்திபன், அஜித் என்ற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


இந்த படத்தின் போது தான் தேவயாணிக்கும் ராஜகுமாரனுக்கு இடையில் காதல் மலர்ந்தது. படப் படிப்பில் ராஜகுமாரனின் அன்பும் அமைதியும் உழைப்பும் தான் அவரை வலுவாக கவர்ந்துள்ளது என சமீபத்திய  பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

அதே போல தேவயாணியின் கொஞ்சலான பேச்சும், இளகிய மனமும் தான் இயக்குனர் ராஜகுமாரனுக்கு பிடித்து போய் தேவயானியை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு இவர்களுடைய காதல் திருமணம் தற்போது வரையில் சிறப்பாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் அளித்த பேட்டி ஒன்றில், தேவயானியின் தம்பியான நகுல், தான் தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் இருந்து என்னை ஒரு தேசவிரோதியாக இன்று வரை பார்ப்பதாக சொல்லி உள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

அதாவது, தேவயாணியை காதலித்து திருமணம் செய்த ராஜகுமாரனை இன்று வரை தேவயாணியின் தம்பி நகுல் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement