• May 09 2024

'நாகசைதன்யா மிகவும் இனிமையான மனிதர்'- கண்ட பாட்டுக்குப் புகழ்ந்து தள்ளிய சாய்பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர் என்ற பட்டத்தோடு அறிமுகமாகியவர் தான் நாகசைத்தன்யா. இருப்பினும் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராகவும் வலம் வருகின்றார். மேலும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இவர் சில ஆண்டகளுக்கு முதல் நடிகை சமந்தாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார். இணைபிரியாத தம்பதிகளாக இருந்த இவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

இவர்கள் பிரிவை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காததால் அவர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. விவாகரத்தைத் தொடர்ந்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விவாகரத்துக்கு பின் சமந்தாவின் மார்கெட் எகிறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அத்தோடு சகுந்தலம், யசோதா, போன்ற திரைப்படங்களிலும் ஹாலிவுட் வெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். நாக சைதன்யா, தற்போது நடிகை சோபிதா துலிபலாவுடன் டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஹூப்ளியில் உள்ள நாக சைதன்யாவின் வீட்டில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என்ற செய்திகாட்டுத் தீ போல பரவி வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவியிடம், அவர் நடித்த சில ஹீரோக்களின் புகைப்படங்களை காட்டி, அவர் பற்றி கேட்கப்பட்டது. 'லவ் ஸ்டோரி'படத்தில் நடித்த நாக சைதன்யாவின் படம் காட்டப்பட்ட போது, ​ நாக சைதன்யா மிகவும் இனிமையான மனிதர், இயல்பிலேயே அவருக்கு உதவி செய்யும் மனம் உண்டு என்று புகழ்ந்து இருந்தார். இதைக்கேட்ட ரசிகர்கள் பலர் ஏற்கனவே அவருக்கு விவாகரத்து, டேட்டிங் என பல பிரச்சனை, இதுல வேற நீங்க புகழ்ந்தால் எப்படி என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement